<$BlogRSDURL$>

Re entry!!!!!
(0) comments

Vivekananda's Ideas - Two revolutions in Western Thought

(0) comments

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்


கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349.

கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
கோவில் தொடர்பு எண்: 04374 -269407.

கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2463354.

கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 256424.

கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2473737.

கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.
கோவில் தொடர்பு எண்: 04364 - 275222.

கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 04368 - 236530.

கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 279423.

(தட்ஸ்தமிழில் படித்தது)
(0) comments

Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com Free Image Hosting at www.picturetrail.com
(0) comments

காப்பு

நேரிசை வெண்பா



துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.


குறள் வெண்பா


அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி


நூல்
நிலைமண்டில ஆசிரியப்பா


சஷ்டியை நோக்கச்
சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவுஞ்
செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில்
பன்மணிச் சதங்கை
கீதம் பாடக்
கிண்கிணி யாட
மையல் நடனஞ் செய்யும்
மயில்வா கனனார்
கையில்வே லால் எனைக்
காக்கவென்று உவந்து
வரவர வேலா
யுதனார் வருக
வருக வருக
மயிலோன் வருக
இந்திரன் முதலா
எண்திசை போற்ற
மந்திர வடிவேல்
வருக வருக
வாசவன் மருகா
வருக வருக
நேசக் குறமகள்
நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த
ஐயா வருக
நீறிடும் வேலவன்
நித்தம் வருக
சிரகிரி வேலவன்
சீக்கிரம் வருக
சரஹண பவனார்
சடுதியில் வருக
சரஹண பவச
ரரரர ரரர
ரிஹண பவச
ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண
வீரா நமோ நம
நிபவ சரஹண
நிறநிற நிறென
வசர ஹணப
வருக வருக
அசுரர் குடி கெடுத்த
ஐயா வருக
என்னை யாளும்
இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம்
பாசாங் குசமும்
பரந்த விழிகள்
பன்னிரண்டும் இலங்க
விரைந்தெனைக் காக்க
வேலோன் வருக
ஐயுங் கிலியும்
அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும்
உயிரையுங் கிலியும்
கிலியுஞ் சௌவும்
கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன்
நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும்
தனியொளி யொவ்வும்
குண்டளி யாம்சிவ
குகன் தினம் வருக
ஆறு முகமும்
அணிமுடி யாறும்
நீறிடு நெற்றியும்
நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும்
பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில்
நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில்
இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து
அழகிய மார்பில்
பல்பூ ஷணமும்
பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட
நவரத்ன மாலையும்
முப்புரி நூலும்
முத்தணி மார்பும்
செப்புழ குடைய
திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில்
சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த
நற்சீ ராவும்
இருதொடை அழகும்
இணைமுழந் தாளும்
திருவடி யதனில்
சிலம்பொலி முழங்க
செககண செககண
செககண செகண
மொகமொக மொகமொக
மொகமொக மொகண
நகநக நகநக
நகநக நகென
டிகுகுண டிகுடிகு
டிகுகுண டிகுண
ரரரர ரரரர
ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி
ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு
டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு
டங்கு டிங்குகு
விந்து விந்து
மயிலோன் விந்து
முந்து முந்து
முருகவேள் முந்து
எந்தனை ஆளும்
ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும்
வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா
லாலா வேசமும்
லீலா லீலா
லீலா விநோதனென்று
உன்திரு வடியை
உறுதியென்று எண்ணும்
என்தலை வைத்துன்
இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம்
இறைவன் காக்க
பன்னிரு விழியால்
பாலனைக் காக்க
அடியேன் வதனம்
அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப்
புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு
கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும்
வேலவர் காக்க
நாசிகள் இரண்டும்
நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப்
பெருவேல் காக்க
முப்பத்து இருபல்
முனைவேல் காக்க
செப்பிய நாவைச்
செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும்
கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை
இனியவேல் காக்க
மார்பை இரத்தின
வடிவேல் காக்க
சேரிள முலைமார்
திருவேல் காக்க
வடிவேல் இருதோள்
வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும்
பெருவேல் காக்க
அழகுடன் முதுகை
அருள்வேல் காக்க
பழுபதி னாறும்
பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை
விளங்கவேல் காக்க
சிற்றிடை அழகுறச்
செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை
நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை
அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும்
பெருவேல் காக்க
வட்டக் குதத்தை
வடிவேல் காக்க
பனைத்தொடை இரண்டும்
பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள்
கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை
அருள்வேல் காக்க
கைகள் இரண்டும்
கருணைவேல் காக்க
முன்கை இரண்டும்
முரண்வேல் காக்க
பின்கை இரண்டும்
பின்னவள்ளிருக்க
நாவில் சரஸ்வதி
நற்றுணை யாக
நாபிக் கமலம்
நல்வேல் காக்க
முப்பால் நாடியை
முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை
எதிர்வேல் காக்க
அடியேன் வசனம்
அசைவுள நேரம்
கடுகவே வந்து
கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில்
வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில்
அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில்
எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச்
சதுர்வேல் காக்க
காக்க காக்க
கனகவேல் காக்க
நோக்க நோக்க
நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத்
தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப்
பாவம் பொடிபட
பில்லி சூனியம்
பெரும்பகை அகல
வல்ல பூதம்
வலாஷ்டிகப் பேய்கள்
அல்லறல் படுத்தும்
அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும்
குரளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும்
பிரம் மராஷதரும்
அடியனைக் கண்டால்
அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி
இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும்
எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும்
காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும்
மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும்
சண்டாளங்களும்
என்பெயர் சொல்லவும்
இடிவிழுந்து ஓடிட
ஆனை அடியினில்
அரும்பா வைகளும்
பூனை மயிரும்
பிள்ளைள் என்பும்
நகமும் மயிரும்
நீள்முடி மண்டையும்
பாவைகள் உடனே
பல கலசத்துடன்
மனையிற் புதைத்த
வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும்
ஒட்டியப் பாவையும்
காசும் பணமும்
காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும்
ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால்
அலைந்து குலைந்திட
மற்றார் வஞ்சகர்
வந்து வணங்கிட
காலதூ தாளெனைக்
கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட
அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி
மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப்
பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம்
கதறிடக் கட்டு
கட்டி உருட்டு
கைகால் முறிய
கட்டு கட்டு
கதறிடக் கட்டு
முட்டு முட்டு
முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு
செதில் செதிலாக
சொக்கு சொக்கு
சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து
கூர்வடி வேலால்
பற்று பற்று
பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி
தணலது வாக
விடுவிடு வேலை
வெருண்டது ஓட
புலியும் நரியும்
புன்னரி நாயும்
எலியும் கரடியும்
இனித்தொடாது ஓடத்
தேளும் பாம்பும்
செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள்
கடித்துஉயர் அங்கம்
ஏறிய விஷங்கள்
எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும்
ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம்
வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம்
சொக்குச் சிரங்கு
குடைசல் சிலந்தி
குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை
படர்தொடை வாழை
கடுவன் படுவன்
கைத்தாள் சிலந்தி
பற்குத் அரணை
பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும்
என்றனைக் கண்டால்
நில்லா தோட
நீயெனக் கருள்வாய்
ஈரேழு உலகமும்
எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும்
அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும்
மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க
உன்திரு நாமம்
சரவண பவனே
சைலொளி பவனே
திரிபுர பவனே
திகழொளி பவனே
பரிபுர பவனே
பவமொழி பவனே
அரிதிரு மருகா
அமரா பதியைக்
காத்துத் தேவர்கள்
கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே
கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா
கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த
இனியவேல் முருகா
தணிகா சலனே
சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை
கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ்
பால குமரா
ஆவினன் குடிவாழ்
அழகிய வேலா
செந்தில்மா மலையுறும்
செங்கல்வராயா
சமரா புரிவாழ்
சண்முகத்தரசே
காரார் குழலாள்
கலைமகள் நன்றாய்
என்நா இருக்க
யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும்
எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன்
பரவசமாக
ஆடினேன் நாடினேன்
ஆவினன் பூதியை
நேசமுடன் நான்
நெற்றியில் அணியப்
பாச வினைகள்
பற்றது நீங்கி
உன்பதம் பெறவே
உன் அருளாக
அன்புடனனிரட்சி
அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக
வேலா யுதனார்
சித்திபெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க
மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க
வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க
மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க
மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க
வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன்
வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள்
எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன்
எத்தனை செய்தால்
பெற்றவள் நீ குரு
பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள்
பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்
பிரியம் அளித்து
மைந்தன் என்மீதுஉன்
மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார்
தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி
கவசம் விரும்பிய
பாலன் தேவ
ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில்
கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன்
அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு
நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி
கவசம் தனைச்
சிந்தை கலங்காது
தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்து
ஆறுருக் கொண்டு
ஓதியே செபித்து
உவந்து நீறணிய
அஷ்டதிக்கு உள்ளோர்
அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்பர்
சேர்ந்தங்கு அருளுவர்
மாற்றலர் எல்லாம்
வந்து வணங்குவர்
நவகோனள் மகிழ்ந்து
நன்மை அளித்திடும்
நவமதன் எனவும்
நல்லெழில் பெறுவர்
எந்த நாளும்
ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாமங்
கவசத் தடியை
வழியாய்க் காண
மெய்யாய் விளங்கும்
விழியாறய்க் காண
வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப்
பொடி பொடியாக்கும்
நல்லோர் நினைவில்
நடனம் புரியும்
சர்வ சத்துரு
சங்கா ரத்தடி
அறிந்தெனது ள்ளம்
அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு
விருந்து ணவாகச்
சூரபத் மாவைத்
துணிநத்தகை யதனால்
இருபத்து ஏழ்வர்க்கு
உவந்த அமுதளித்த
குருபரன் பழநிக்
குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை
சேவடி போற்றி
எனைத்தடுத்து ஆட்கொள்
என்றெனது உள்ளம்
மேவிய வடிவுறும்
வேலவா போற்றி
தேவர்கள் சேனா
பதியே போற்றி
குறமகள் மனமகிழ்
கோவே போற்றி
திறமிகு திவ்விய
தேகா போற்றி
இடும்பா யுதனே
இடும்பா போற்றி
கடம்பா போற்றி
கந்தா போற்றி
வெட்சி புனையும்
வேளே போற்றி
உயர்கிரி கனக
சபைக்கோர் அரசே
மயில்நடம் இடுவோய்
மலரடி சரணம்
சரணம் சரணம்
சரவணபவ ஓம்
சரணம் சரணம்
சண்முகா சரணம்.
(0) comments

தினமும் காலையில் மற்ற அனைத்து வலைப்பதிவுகளையும் மேய்ந்துவிடும் எனக்கு சொந்தவலைப்பதிவுக்கு வந்து செல்லத்தான் நேரம் வரவில்லைபோலும்.
வருடம் ஓரிரு முறையாவது சென்னைக்கு சென்றுவிடுகிறேன். எனவே சென்னைக்கு செல்லும் முன் கண்டிப்பாக ஒரு பதிவாவது பதிய வேண்டும், இதுதான் 2006-க்கான WISH

HAPPY NEW YEAR
(0) comments

Feel At Home

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு வலைப்பதிவு."Feel At Home" என்ற சொல்லாக்கத்தின் நிஜ விளக்கத்தை இம்முறை விடுப்பில் தாயகம் சென்றபோது உணர முடிந்தது.
மக்கள் கூட்டத்தையும், கூவத்தையும், அதன் கொசுக்களையும், தண்ணீர் பற்றாக்குறைகளையும், மின்வெட்டுக்களையும், சாலை நிறைய வாகனங்களையும், அதன் இடுக்கில் போட்டியிடும் ஆட்டோக்களையும், சைக்கிள்களையும், அவ்வப்போது நனைத்துச் செல்லும் மழைத்தூரலையும், "தொல்லை" , "கஷ்டம்" என்று வாயளவில் கூறிக் கொண்டே அனுபவிக்கும் சுகம், ..... ம்!!! இனிமேல் அடுத்த வருடம்தான்.
(0) comments

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com