<$BlogRSDURL$>

அடுத்து "வச்சுக்கோ" வரிசையில் EXCITE.COM 125 MB இ(லவச)-தபால் பெட்டியை September முதல் வழங்குகிறது.
HOTMAIL-ம் தனது கத்தியைத் தீட்டி, பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது. கூடிய விரைவில் அதுவும் 250MB இலவசப் பெட்டியைத் தரும் என நம்பலாம்.
(0) comments

மனிதரில் இத்தனை நிறங்களா?

கடந்த ஜுன் 6-ம் தேதி ஹிந்து-வில் செய்தியான ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட RAW அதிகாரி பற்றி முன்பு (ஜுன் 12 அன்று ) என் எண்ணங்களை எழுதியிருந்தேன்.
அதிலிருந்த சந்தேகங்களுக்கெல்லாம் இன்றைய தினமலரில் பதில் வந்துள்ளது. அதில் சில பகுதிகள் இங்கே:

"அம்பலம்!' : அமெரிக்காவின் அசிங்கமான பொய் முகம் : உளவுத் துறை ஊடுருவலில் புது திருப்பம்

அமெரிக்கா கொட்டிக் கொடுக்கும் டாலருக்கு மதி மயங்கி, இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த பலர் விலை போயுள்ளனர். முக்கிய தகவல்களை சி.ஐ.ஏ., உளவு அமைப்புக்கு கூறி வந்துள்ளனர். இந்தியாவில், "ரா', ஐ.பி., உள்ளிட்ட மூன்று முக்கிய உளவுத்துறைகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் அமெரிக்காவின் கையாட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, இஸ்ரேல் உளவு அமைப்பான "மொசாத்'தும், இந்திய உளவுத்துறைகளில் ஊடுருவியுள்ளதும் தெரிய வந்துள்ளது............................

இதில், உயர் பதவியில் இருந்த ரபிந்தர் சிங் என்ற அதிகாரி, அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேலின் "மொசாத்” உளவு அமைப்புகளின் கையாளாக செயல்பட்டு வந்த விஷயம் தற்போது வெளிவந்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, இஸ்ரேலின் பொய் முகங்கள் அம்பலமாகியுள்ளன...........................

கடந்த சில மாதங்களுக்கு முன், ரபிந்தர் சிங்கிடம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட பல முக்கிய ஆவணங்களின் நகல்கள் இருப்பதை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். அப்போது முதல், அவருடைய நடவடிக்கை கண்காணிக்கப்பட்டது. நான்கு மாத கண்காணிப்பிற்கு பின் அவரை கைது செய்ய நாள் குறிக்கப்பட்டது. இதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட ரபிந்தர் சிங், கடந்த மே மாதம் 14ம் தேதி நேபாளம் வழியாக அமெரிக்காவுக்கு தப்பி விட்டார்..............................

உலகளவில் வெளிநாடுகளில் நடக்கும் உளவு சம்பந்தப்பட்ட மாநாடுகளில் ரபிந்தர் சிங் அதிகளவில் பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் நடக்கும் மாநாடுகளின் போது அடிக்கடி அவர் தனது அறையை விட்டுச் சென்று விடுவார். அதற்கு, "உறவினர்கள், நண்பர்களை பார்க்கச் செல்கிறேன்' என்று அவர் காரணம் கூறியுள்ளார். பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சமயத்தில், சி.ஐ.ஏ., "மொசாத்' அமைப்புகளின் உயரதிகாரிகளை அவர் சந்தித்துள்ளார்.............................
(0) comments
ரூ.250 கோடியில் திருமணம்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல் தன் ஒரே மகளின் திருமணத்தை மிக ஆடம்பரமாக பாரிசில் ஒரு வார காலத்திற்கு நடத்த உள்ளாராம். செலவு ரூ. 250 கோடி.
சந்தனம் மிஞ்சினால் ..............?
மேலும் பல சுவையான இது போன்ற சந்தனச் செய்திகளை இங்கே அல்லது இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(0) comments
நாகாலாந்தில் நாய்க் கறி மிகவும் பிரபலம். அதை எப்படிச் சமைத்து சாப்பிடுவார்கள் தெரியுமா?
விழா வருதுன்னாலே, வீட்ல வளர்கிற நாய்களில் ஒன்றை தெரிவு செய்து, மூன்று நாள் பட்டினி போட்டுருவாங்க! நாலாவது நாள், தண்ணில ஊற வச்ச அரிசியை நாய் தின்னக் கொடுப்பாங்க... பேய் பசியில இருக்கும் நாய், அதை லவக்கு, லவக்குன்னு தின்னுப்புடும்!
"நாய் அதைச் சாப்பிட்டு ஆறு மணி நேரம் ஆனதும், மேல் லோகம் அனுப்பி, அதன் குடலை வெட்டி தனியே எடுத்துடுவாங்க. அந்தக் குடலை நிலக்கரி தணலில் பதமாக வாட்டி, வேக வைப்பாங்க... அந்த நேரத்துல, நாய் குடலில இருக்கிற அரிசி வெந்து சோறாகி விடும்... அப்புறம் என்ன... ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் குழந்தை சொல்வது போல, அப்படியே சாப்பிடலாம்!'


தினமலர் அந்துமணியின் நாகாலாந்து நண்பர் ஒருவர் கூறியதாக அவர் இந்த வாரம் தன் வாரமலரில் “பா. கே. ப. “பகுதியில் எழுதியதைத்தான் மேலே நீங்கள் படித்தது.
அடுத்த தடவை யாராவது ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்டால் இந்தச் செய்தி கண்டிப்பாக நினைவுக்கு வர வேண்டும்.

(0) comments

மேலும் ஒரு GB பெட்டி

இது என்ன ஒரு GB சீசனா? ஆளாளுக்கு 100MB வச்சுக்கோ, 1GB வச்சுக்கோன்னு அள்ளி வழங்கறாங்க!!
அடுத்து 1GB லிஸ்டில் நேற்று முதல் இணைந்து இருப்பது REDIFF MAIL
GMAIL 1GB + SPYMAC 1GB + REDIFF 1GB + YAHOO 100MB
அடேங்கப்பா, இனிமேல் தனி HARD DISC எதுவும் வேண்டாம்.
ஆனால் இந்த வீங்கிக் கொண்டே போகும் பலூன்கள் என்று வெடிக்கப் போகின்றனவோ?

(8) comments

(தமிழ்ப்) பிதா தேற்றம்
“ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி
கூறிலே ஒன்றுதள்ளி குன்றத்தில் பாதிசேர்த்தால்
வருவது கர்ணந்தானே...... “

இது ஒரு பழங்கால தமிழ்ப் புலவனின் பாடல். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியாது. பழைய பாடல், மிகவும் பழைய சரக்கு.

ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி கூறிலே ஒன்றுதள்ளி :
நீளத்தில் 8 ல் 7 பகுதி i.e 7/8 th of “b”
குன்றத்தில் பாதிசேர்த்தால்
உயரத்தில் பாதியைக் கூட்டினால் i.e 1/2 of “a”
வருவது கர்ணந்தானே :
கிடைப்பது கர்ணம். i.e 7/8 of “b” + 1/2 of “a” =”c”

இதையேதான் பிதாகரஸ் பலவருடங்களுக்குப் பிறகு புதிய மொந்தையில் அடைத்து
C= sq. root of (a sq + b sq) என்று எழுதி அதை
“பிதாகரஸ் தியரம்” எனத் தன் பெயரில் பிரபலப் படுத்திக் கொண்டார். அல்லது அவர் பெயரால் அத்தேற்றம் பிரபலப்படுத்தப் பட்டுவிட்டது
பிதாகரஸ்களுக்கு பிதாக்கள் (அப்பன்கள்) எல்லாம் அந்தக்காலத்திலேயே நம் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். இதைப் போல இன்னும் எத்தனை தேற்றங்களும் சூத்திரங்களும் சொல் வழக்கிலேயே இருந்து மறைந்து விட்டனவோ ?
(0) comments

COMPREHENSION

இது தேர்வு நேரம்
“All of you are defaming Bihar. I will not tolerate all this. Sabko andar kardenge,” (I will put you all behind the bars) declared the .............”

இந்த பொறுப்பு மிக்க வாக்கியங்களை யார் யாரிடம் கூறியது? எங்கே?
எப்போது? எந்த சூழ்நிலையில்? யார் முன்னிலையில்?
சரியான பதில் சொல்பவர்களுக்குப் பரிசாக பாட்னாவில் அரசாங்கவேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
சரியாகச் சொல்லாவிட்டால் Sabko andar kardenge

பீகாரின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டிய இந்த "கட்டியம்" பீகாரின் பொற்காலத்திற்கு ஒரு கர்த்தாவான திருவாளர் லாலூ பிரசாத் யாதவ் (ரயில்வே மந்திரி) அவர்களினால் கடந்த ஜூன் 13 ஞாயிறு இரவு 11.45 மணியளவில் பாட்னா ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் கூறப்பட்டது.
இன்றைய "டெக்கான் ஹெரால்ட்" பாருங்கள்.
லாலூ கையோடு விலங்கை எடுத்துச் சென்றிருந்தாரா என அதில் செய்தி இல்லை.
இதை மட்டும் மனதார லாலூ சொல்லியிருந்தால் லாலூவை நம்பி ஜோக் எழுதுபவர்களின் கதி என்ன ஆவது?
http://lookin.topcities.com/jokes/laloo_joke.htm
http://www-personal.engin.umich.edu/~saha/archives/Laloo
http://www.cetarchis.org/funhouse/political-joke.htm
http://www.fukkad.com/jokes/desi/yadav.shtml
http://www.srikumar.com/humour.htm

List is Endless!!!!

இந்த இணையத்தளங்கள் எல்லாம் இழுத்து மூட வேண்டியதுதான்.
சூரியன் சூரியனாகத்தான் இருக்க வேண்டும். சந்திரனாக மாறக்கூடாது.
லாலூ லாலூவாகத்தான் இருக்க வேண்டும். தன் அடையாளத்தை என்றும் இழக்கக் கூடாது.

கூடிய விரைவில் இப்படியெல்லாம் நடந்தாலும் நடக்கலாம்.


(1) comments

Maybe India has found new “ambassadors-at-large”.
இது இன்றைய "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" -ல் அமெரிக்காவில் இந்தியர்கள் நுழைய முற்பட்டுள்ள புதிய ( Rather மிகப் பழைய ) துறைகளைப் பற்றிய செய்தி.
Wish these Ambassadors very best for a (un)successful career.
(0) comments

Dismissed


NEW DELHI, JUNE 5. The Government today dismissed a senior Research and Analysis Wing (R&AW) officer, Ravinder Singh, missing for over a fortnight, for his alleged activities against the national interest.
Mr. Singh, a 1978 batch R&AW officer, now Joint Secretary and in charge of South East Asia, was dismissed after the President, A.P.J. Abdul Kalam, gave his nod for his dismissal under Article 311 (2) (c) of the Constitution, official sources said.

இது கடந்த 6ம் தேதி ஹிந்து தினசரியில் சிறியதாக ஒரு மூலையில் வந்த அனேகம் பேர் பார்த்திருக்கமுடியாத செய்தி. அரசாங்கத்தால் தகுதியானவர் எனத் தெரிவு செய்யப்பட்டு நாட்டுரகசியங்கள் புழங்கும் ஒரு துறையில் சேர்ந்து இணைச் செயலாளர் அளவுக்கு பதவி உயர்ந்து விளங்கிய ஒரு அதிகாரி ஏதோ முறைகேடுகள் செய்துவிட்டு திடீரென இரண்டு வாரம் காணாமல் போய்விட்டாராம். அதனால் நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியே அவரை "டிஸ்மிஸ்" செய்துவிட்டாராம். எங்கேயோ எதுவோ இடிக்கவில்லை?

CBI, ராணுவம் இவற்றின் செயல்பாடுகள் குறித்துகூட நமக்கு எதாவது தெரியும் ஆனால் RAW -வின் செயல்கள் குரித்து RAW -வில் வேலை செய்பவர்களுக்கே ஏதாவது தெரியுமா என்பது சந்தேகம்தான்.
இந்த இரண்டு வரிச் செய்திக்குப் பின் எத்தனை பக்கக் கதை உள்ளதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அந்த அதிகாரி உயிரோடுதான் இருக்கிறாரோ இல்லையோ அப்படி இருந்தால் எந்த நாட்டில் இருக்கிறாரோ எந்த நாட்டின் சார்பாக அங்கு இருக்கிறாரோ. இதில் பாவப்பட்டது அவரது குடும்பம்தான்.
நேருக்கு நேராக முன்னால் இருந்து சண்டை போட்டால் அது WAR. (முதுகுக்கு) பின்னால் இருந்து சண்டை போட்டால் அது RAW
“கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்”
என்ற பழமொழியும்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.”
என்ற குறளும்தான் ஞாபகம் வருகிறது


(0) comments


GIF -ல் இது போன்ற ஜிகினா வேலைகளைச் செய்ய நீங்கள் நாடவேண்டிய ஸ்தாபனம்

http://www.3dtextmaker.com

டிங்க் டிங்க் டிடின் (இது BGM)

AUDIO BLOGGER -ஐ இணைக்க உள்ளேன், இணைத்து விட்டால் இந்த சப்தத்தையும் விரைவில் கேட்கலாம்.

(0) comments



நீண்ட நாட்களாக கோயிலுக்கு செல்லவேண்டும் என்ற ஏக்கம் இன்று தாராசுரம் ஐராவதேஸ்வர சாமி கோவிலை பார்த்ததன் மூலம் ஓரளவு தணிந்தது.கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன் நேரில் சென்றது. அந்த நினைவுகளின் மிச்சம் ஒன்றுகூட இன்று இல்லை.

கும்பகோணம் அருகில் இருக்கும் தாராசுரம் கோவில் கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமையானது. இரண்டாம் ராஜராஜசோழானால் கட்டப்பட்டது.
களிமண்ணும் காவிரி மண்ணும் மட்டுமே நிறைந்த இந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கற்றளி எனப்படும் இந்த கற்கோவில் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த நிகழ்வுதாரணம்.
கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை இணைத்து, தாராசுரம் கோவிலின் இணையப்பக்கம் ஒரு கோவிலாகவே திகழ்கிறது.

ஓவ்வொரு சிற்பமும், எந்த ஒரு சிறிய சிறப்பு அம்சமும் இத்தள(ல)த்தில் காணக் கிடைக்கிறது.
குறிப்பாக , நாட்டிய முத்திரைகள் அடங்கிய சிற்பங்கள் 900 ஆண்டுகளுக்கு முன்னரே பரதம் எத்தனை செழிப்புடன் இருந்திருக்கிறது என அறியத்தருகிறது.
இந்த இணையத்தின் முகப்புப் பகுதியில் கும்பகோணத்தில், மற்றும் அருகில் உள்ள அனைத்து கோவில்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். கட்டாயம் ஒரு முறை (நேரில்) போய் பார்த்து வாருங்கள். இக் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
(0) comments

புகைப்படக் கலை நான் ஆர்வம் செலுத்தும் துறைகளுள் ஒன்று.
கோவையில் படித்துக்கொண்டிருக்கும் போது கல்லூரியிலே இருந்த Photography club மூலமாக வித்தை தெரிந்தது, அதனால் ஆர்வம் வளர்ந்தது.
அந்த நாட்களில் கையில் இருக்கும் மிச்சம் மீதி பணத்தை Mat paper or Glossy paper and chemicals வாங்குவதில் தீர்த்து விட்டு ராத்திரி 9 மணிக்குமேல் இருட்டறையில் சிவப்பு ஒளியின் வெளிச்சத்தில் கருப்பு வெள்ளையில் எத்தனையோ புகைப்படங்களை பிரதியெடுத்து, வெட்டி, ஒட்டி என பல நிகழ்வுகளை முடித்து, அந்தப் புகைப்படங்களையும் Inter collegiate competition - க்கு அனுப்பி, அதில் consolation prize முதல் second prize வரை சிறு சிறு பரிசுகள் வாங்கி மகிழ்ந்த அந்த நினைவுகளை எல்லாம் அசை போடும்போது மனசு லேசாகி வானில் பறப்பது போல ஒரு உணர்வு. அந்த உன்னத உணர்வுகளை, நினைவுகளை அனுபவித்து அசை போட்டு அவற்றை அப்படியே வார்த்தைகளில் கொண்டுவந்து இங்கே பதிக்கவேண்டும், (நேரம் கிடைக்கும்போது)
அதுவரை இப்போதைக்கு புகைப்படத்துறை சம்பந்தமாக பார்க்க படிக்க நேரிட்ட செய்திகளை எழுதுகிறேன்.
முதலில் இந்த இணைப்புகளை சிறிது நேரம் பார்த்து மகிழலாம். பின்னர் அடுத்த பதிவு.

freefoto.com
fotoeffects.com
KODAK tips on photography
(0) comments

கவியரசு கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பாடலில் நாத்திகக் கேள்விகளுக்கு நாசூக்காக அமைந்த பதில்களைப் பார்த்ததும் உடன் அதனை இங்கே பதிக்கத் தோன்றியது.

கடவுள் இருக்கின்றான் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா?
இசையை ரசிக்கின்றாய் இசையின்
உருவம் வருகின்றதா?
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான் அவன்தன்
போதனை மறைகின்றதா?


என்னவொரு வார்த்தை லயம், எத்தனை எளிமை, அதில் ஒரு இனிமை, தேன் தடவிய மருந்து போல் தன் எண்ணத்தை நம் மனதில் ஏற்றும் லாகவம், இலக்கியக் கவிகளுக்கு எந்தவகையிலும் குறையாத, குறையில்லாத, கவிஞன்.
கம்பர் முதல் வைரமுத்து வரை பல "கவியரசுகள்" இருந்தாலும் என்னைப் பொருத்தவரையில் அதற்கு பொருத்தமானவர் கண்ணதாசனே.
என்னைப் பாதித்த மற்றும் யோசிக்க வைத்த வரிகளில் மேலும் சில

நிலை மாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
சாதியும் பேதமும் கூறுவான் அது
வேதம் விதி என்றோதுவான்


பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே!


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பது பண்பாகும்


ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் இதில்
மிருகம் என்பது கள்ளமனம் உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம்


வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!


உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!



உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!


ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்


பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?


(0) comments

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com