<$BlogRSDURL$>

நாகாலாந்தில் நாய்க் கறி மிகவும் பிரபலம். அதை எப்படிச் சமைத்து சாப்பிடுவார்கள் தெரியுமா?
விழா வருதுன்னாலே, வீட்ல வளர்கிற நாய்களில் ஒன்றை தெரிவு செய்து, மூன்று நாள் பட்டினி போட்டுருவாங்க! நாலாவது நாள், தண்ணில ஊற வச்ச அரிசியை நாய் தின்னக் கொடுப்பாங்க... பேய் பசியில இருக்கும் நாய், அதை லவக்கு, லவக்குன்னு தின்னுப்புடும்!
"நாய் அதைச் சாப்பிட்டு ஆறு மணி நேரம் ஆனதும், மேல் லோகம் அனுப்பி, அதன் குடலை வெட்டி தனியே எடுத்துடுவாங்க. அந்தக் குடலை நிலக்கரி தணலில் பதமாக வாட்டி, வேக வைப்பாங்க... அந்த நேரத்துல, நாய் குடலில இருக்கிற அரிசி வெந்து சோறாகி விடும்... அப்புறம் என்ன... ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் குழந்தை சொல்வது போல, அப்படியே சாப்பிடலாம்!'


தினமலர் அந்துமணியின் நாகாலாந்து நண்பர் ஒருவர் கூறியதாக அவர் இந்த வாரம் தன் வாரமலரில் “பா. கே. ப. “பகுதியில் எழுதியதைத்தான் மேலே நீங்கள் படித்தது.
அடுத்த தடவை யாராவது ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்டால் இந்தச் செய்தி கண்டிப்பாக நினைவுக்கு வர வேண்டும்.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com