சிவசங்கர் பாபா பதில்கள் -1
கேள்வி: அருள் என்றால் என்ன?
பாபா: மூச்சு உற்பத்தியாகும் இடம் மனது. நாம் மனத்தை கட்டுப்படுத்தி மூச்சுக் காற்று ஒடுங்கும் இடமாகிய புருவ மத்தியில் நிலைப்படுத்தினால் மனதின் எண்ண ஒடுக்கங்கள் நின்றுவிடும். ஞானி என்பவன் நான், என்னுடையது என்ற பந்தங்களை விட்டுவிட்டு இறைவனது சிந்தனையை மட்டும் எண்ணத்தில் கொண்டு மனத்தை அடக்கி யோகநிலைக்கு செல்கிறான். யோகி என்பவன் மூச்சுக் காற்றை ஒடுக்கி யோகத்தினால் மனத்தை கட்டுப் படுத்தி ஞானத்தை அடைகிறான். புத்த மத பிலாசபியில் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் மூச்சுக் காற்று ஒடுங்குவதை பார்த்துக்கொண்டிருந்தால் மெல்ல மெல்ல எண்ண ஓட்டங்கள் நின்று மனது ஒடுங்கும் என்று கூறுகிறது.
குழப்பமற்ற தெளிவான சிந்தனையை கொண்டு வருவது தான் ஆன்மிகம். மனத்தை எண்ணத்தை ஒடுக்குகிற வித்தை தான் ஆன்மிகம். நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்னும்போது அந்த தெய்வங்கள் எல்லாம் உங்களிடத்தில் இருக்கின்றன. முருகன் இதயத்திற்கு சொந்தம். மனத்திற்கு சொந்தக்காரன் சந்திரன். சூரியன் எண்ணம். வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கிறது. உங்களிடம் இருக்கிற வெளிச்சம் வெளியே வரவேண்டுமானால் அதற்கான சுவிட்ச் உங்களிடம் இருக்கிறது. வெளிச்சத்தை பெறுகிற வித்தையை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் நீங்களும் வெளிச்சமாகிவிடுவீர்கள். வெளிச்சமானவர்களை கண்டறிவீர்கள்.
உங்களது வாழ்க்கையில் வரும் நிகழ்வுகளை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்ற வித்தையை தெரிந்துகொள்வீர்கள். நாமெல்லாம் பார்வையாளர்கள்தாம், செயல்படுகிறவர்கள் அல்ல. அகலிகை கல் ஆனபோது ராமர் பிறக்கவில்லை. அந்த வழியில் ராமர் காட்டிற்கு செல்ல வேண்டும். அவன் கால் அந்தக் கல் மீது பட்டு அவள் பெண்ணாக வேண்டும். எப்படி அகலிகைக்கு ராமன் கால் பட்டதால் சாப விமோசனம் ஆகிவிட்டதோ அது போல் உங்களுக்கும் கஷ்டம் தீருகிற நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். அதனால், உங்களுடைய கஷ்டமும் தீரும். நீங்கள் கஷ்டம் தீருகிற நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்களா அல்லது இங்கு வந்ததால் உங்களுடைய கஷ்டம் தீர்ந்ததா என்பது இறைவன் ஒருவனுக்குத் தான் தெரியும். ஆனால் உங்களுடைய அனைத்துப் பிரச்சினைகளும் நிச்சயமாக தீர்ந்துவிடும். உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். நீங்கள் என்னிடத்தில் பூரண சரணாகதி அடைந்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிவசங்கர் பாபா
நன்றி: http://samachar.com/tamil/religion.php dt 13/3/04
அருள் என்பதைப் பற்றி சி.பாபா அருளியிருக்கும் உரைதான் இது.
பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டதோ என ஐயப்பாடு எழுகிறது.
என்னளவில் மூச்சு உற்பத்தியாகுமிடம் மூக்கு. மனது என பாபா இதயத்தை சொல்லுகிறாரோ அல்லது நுரையீரலை சொல்லுகிறாரோ, தெரியவில்லை.
நான், என்னுடையது என்ற பந்தங்களை விடுபவன் தான் ஞானி என்கிறார், அதே சமயம், இறுதியில், “என்னிடத்தில்” பூரண சரணாகதி அடையுங்கள், பிரச்சினைகளை நான் தீர்த்து “வைப்பேன்” என்கிறார்.எனவே தர்க்கசாத்திரப்படி இவர் ஞானியாகவோ அல்லது யோகியாகவோ இருக்க முடியாது.
மேலும், காற்று ஒடுங்குவதைப் பார்க்க முடியாது. கண்களை மூடிக் கொண்டால் நிச்சயம் பார்க்க முடியாது.
நாமெல்லாம் பார்வையாளர்கள்தாம், செயல்படுகிறவர்கள் அல்ல என்ற கருத்து சற்றும் ஏற்புடைத்தக்கதல்ல. எல்லாம் அவன் செயல் என சும்மாவே இருக்க முடியுமா? அடுத்த வேளைக்கு சோறு கிடைக்குமா?
ஆனாலும் சில முத்துக்கள் இதில் உள்ளதை மறுக்க முடியாது.
“குழப்பமற்ற தெளிவான சிந்தனையை கொண்டு வருவது தான் ஆன்மிகம்.”
“மனத்தை எண்ணத்தை ஒடுக்குகிற வித்தை தான் ஆன்மிகம்.”
“நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது”
“வெளிச்சத்தை பெறுகிற வித்தையை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் நீங்களும் வெளிச்சமாகிவிடுவீர்கள். வெளிச்சமானவர்களை கண்டறிவீர்கள்.”
அன்னப் பறவையைப் போல நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு அதை மட்டும் போற்றுவோம்.
கேள்வி: அருள் என்றால் என்ன?
பாபா: மூச்சு உற்பத்தியாகும் இடம் மனது. நாம் மனத்தை கட்டுப்படுத்தி மூச்சுக் காற்று ஒடுங்கும் இடமாகிய புருவ மத்தியில் நிலைப்படுத்தினால் மனதின் எண்ண ஒடுக்கங்கள் நின்றுவிடும். ஞானி என்பவன் நான், என்னுடையது என்ற பந்தங்களை விட்டுவிட்டு இறைவனது சிந்தனையை மட்டும் எண்ணத்தில் கொண்டு மனத்தை அடக்கி யோகநிலைக்கு செல்கிறான். யோகி என்பவன் மூச்சுக் காற்றை ஒடுக்கி யோகத்தினால் மனத்தை கட்டுப் படுத்தி ஞானத்தை அடைகிறான். புத்த மத பிலாசபியில் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் மூச்சுக் காற்று ஒடுங்குவதை பார்த்துக்கொண்டிருந்தால் மெல்ல மெல்ல எண்ண ஓட்டங்கள் நின்று மனது ஒடுங்கும் என்று கூறுகிறது.
குழப்பமற்ற தெளிவான சிந்தனையை கொண்டு வருவது தான் ஆன்மிகம். மனத்தை எண்ணத்தை ஒடுக்குகிற வித்தை தான் ஆன்மிகம். நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்னும்போது அந்த தெய்வங்கள் எல்லாம் உங்களிடத்தில் இருக்கின்றன. முருகன் இதயத்திற்கு சொந்தம். மனத்திற்கு சொந்தக்காரன் சந்திரன். சூரியன் எண்ணம். வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கிறது. உங்களிடம் இருக்கிற வெளிச்சம் வெளியே வரவேண்டுமானால் அதற்கான சுவிட்ச் உங்களிடம் இருக்கிறது. வெளிச்சத்தை பெறுகிற வித்தையை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் நீங்களும் வெளிச்சமாகிவிடுவீர்கள். வெளிச்சமானவர்களை கண்டறிவீர்கள்.
உங்களது வாழ்க்கையில் வரும் நிகழ்வுகளை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்ற வித்தையை தெரிந்துகொள்வீர்கள். நாமெல்லாம் பார்வையாளர்கள்தாம், செயல்படுகிறவர்கள் அல்ல. அகலிகை கல் ஆனபோது ராமர் பிறக்கவில்லை. அந்த வழியில் ராமர் காட்டிற்கு செல்ல வேண்டும். அவன் கால் அந்தக் கல் மீது பட்டு அவள் பெண்ணாக வேண்டும். எப்படி அகலிகைக்கு ராமன் கால் பட்டதால் சாப விமோசனம் ஆகிவிட்டதோ அது போல் உங்களுக்கும் கஷ்டம் தீருகிற நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். அதனால், உங்களுடைய கஷ்டமும் தீரும். நீங்கள் கஷ்டம் தீருகிற நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்களா அல்லது இங்கு வந்ததால் உங்களுடைய கஷ்டம் தீர்ந்ததா என்பது இறைவன் ஒருவனுக்குத் தான் தெரியும். ஆனால் உங்களுடைய அனைத்துப் பிரச்சினைகளும் நிச்சயமாக தீர்ந்துவிடும். உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். நீங்கள் என்னிடத்தில் பூரண சரணாகதி அடைந்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிவசங்கர் பாபா
நன்றி: http://samachar.com/tamil/religion.php dt 13/3/04
அருள் என்பதைப் பற்றி சி.பாபா அருளியிருக்கும் உரைதான் இது.
பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டதோ என ஐயப்பாடு எழுகிறது.
என்னளவில் மூச்சு உற்பத்தியாகுமிடம் மூக்கு. மனது என பாபா இதயத்தை சொல்லுகிறாரோ அல்லது நுரையீரலை சொல்லுகிறாரோ, தெரியவில்லை.
நான், என்னுடையது என்ற பந்தங்களை விடுபவன் தான் ஞானி என்கிறார், அதே சமயம், இறுதியில், “என்னிடத்தில்” பூரண சரணாகதி அடையுங்கள், பிரச்சினைகளை நான் தீர்த்து “வைப்பேன்” என்கிறார்.எனவே தர்க்கசாத்திரப்படி இவர் ஞானியாகவோ அல்லது யோகியாகவோ இருக்க முடியாது.
மேலும், காற்று ஒடுங்குவதைப் பார்க்க முடியாது. கண்களை மூடிக் கொண்டால் நிச்சயம் பார்க்க முடியாது.
நாமெல்லாம் பார்வையாளர்கள்தாம், செயல்படுகிறவர்கள் அல்ல என்ற கருத்து சற்றும் ஏற்புடைத்தக்கதல்ல. எல்லாம் அவன் செயல் என சும்மாவே இருக்க முடியுமா? அடுத்த வேளைக்கு சோறு கிடைக்குமா?
ஆனாலும் சில முத்துக்கள் இதில் உள்ளதை மறுக்க முடியாது.
“குழப்பமற்ற தெளிவான சிந்தனையை கொண்டு வருவது தான் ஆன்மிகம்.”
“மனத்தை எண்ணத்தை ஒடுக்குகிற வித்தை தான் ஆன்மிகம்.”
“நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது”
“வெளிச்சத்தை பெறுகிற வித்தையை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் நீங்களும் வெளிச்சமாகிவிடுவீர்கள். வெளிச்சமானவர்களை கண்டறிவீர்கள்.”
அன்னப் பறவையைப் போல நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு அதை மட்டும் போற்றுவோம்.
Comments:
Post a Comment