<$BlogRSDURL$>

=====================================================================
10 ஆண்டுகள் கடுங்காவல்...! ரூ.55 லட்சம் அபராதம்...! சாந்தகுமார் கொலை வழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு தண்டனை
சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 55 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பிரின்ஸ் சாந்தகுமார் மற்றும் ஜீவஜோதியை கடத்தியது குறித்த வழக்கு தீர்ப்பு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நன்றி : dinamalar
“இந்தத் திருகுக் கத்தியை நான்தான் இடும்பன்காரியிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்தேன்.இதை வீசி எறிந்தவன் நானேதான்! இந்த என்னுடைய வலது கரந்தான்! சோழ சக்கரவர்த்திகளுக்கு முடிசூட்டிய பரம்பரையில் வந்த இந்தக் கரந்தான் கத்தியை எறிந்தது. ஆனால் இளவரசர் கரிகாலர் மீது எறியவில்லை, நந்தினியின் பேரில் எறிந்தேன். என்னை மோகவலையில் ஆழ்த்தித் துரோகப் படுகுழியில் வீழ்த்திய அந்த மாயப் பிசாசைக் கொன்றுவிட எண்ணி எறிந்தேன்; குறி தவறிக் கரிகாலர் மீது விழுந்தது!..."
அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நெடுங்கதையில் பெரிய பழுவேட்டரையர், ( வயது : 60+ ) வாக்குமூலம்

நன்றி : projectmadurai

60 வயது தாண்டிவிட்டால் ஆண்களுக்கு இளமை திரும்பிவிடுமா? ஆயிரங்காலத்து கேள்வி!! கிழவர்களை (16+ பெண்கள் மூலம்)கேட்டால்தான் தெரியும்.

பாரதியின் அம்மாக்கண்ணு பாட்டுதான் ஏதோ, சம்பந்தமே இல்லாமல் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே.
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com