<$BlogRSDURL$>

DSCN0202a
விசுவின் அரட்டை அரங்கம் மார்ச் 26 அன்று பஹ்ரைனில் நடக்க இருப்பதை முன்னிட்டு அதற்கான வடிகட்டும் முன் அரட்டைகள் நடைபெற்றன. அந்த முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக எப்படி சின்னத் திரையில் பேசவேண்டும் என ஒரு ஜுனியர் விசு, வகுப்புகள் நடத்தினார். நவரசமும் கலந்த ஒரு நாடகம்தான் அரட்டை அரங்கம். அந்த நாடகம் 180 நாடுகளில் உள்ள 6 முதல் 60 வயதுவரை அனைவரையும் கவர வேண்டும். எனவே நடிகர்களாக மாறுங்கள் என்றார்.
உண்மைதான். மக்களை ஏமாற்ற நடிகர்களாக மாற வேண்டியது அவசியம்தான்.ஆனால் பேசவந்த பேச்சாளர்களிடமும் தேர்வுக்குழு நடிகர்களாகத்தான் நடந்து கொண்டது.
பேசவந்தவர்களும் மக்கள்தானே என்ற எண்ணமா, தெரியவில்லை. ஆனால் முன்பே தயாரித்துவந்த, நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட (தேர்வு) நாடகத்தை நன்றாக நடத்தியுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர்கள், அதாவது பேச்சாளர்கள் மார்ச் 26 அன்று இயக்குனர் "விசு" முன்னிலையில் உலகத்து மக்கள் காண நன்றாகவே நடித்துக் காட்டினார்கள்.
ஐயகோ! நாமனைவரும் மக்களோ அன்றி மாக்களோ? பராபரமே யாமறியோம்.

ஆனால் ஒரு முக்கிய செய்தியை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். சன் தொலைக்காட்சியில் வரப்போகும் விசுவின் இறுதி அரட்டை அரங்கம் பஹ்ரைனில் எடுக்கப் பட்டதுதானாம்.
" இனிமேல் யார் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளட்டும். ஆனால் அது விசுவின் அரட்டை அரங்கமாக நிச்சயம் இருக்காது. என் உடல் நலம் அதிகப் பயணங்களைத் தாங்காது. என் மனைவியும் மகள்களும் என் உடல்நலம் மேலும் கெட்டுவிடக்கூடாது என வற்புறுத்தி கூறிவிட்டதால்தான் இந்த முடிவு" என முத்தாரமாய் பேசி, பின்னர் தான் தேர்தலில் "நிற்க" இருப்பதாகக் கூறினார். அதற்கு மட்டும் உடல் நலம் ஒரு பொருட்டே இல்லையாம்.
சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் என்று யாரோ எதற்கோ கூறியதுதான் ஞாபகம் வருகிறது.
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com