<$BlogRSDURL$>

=====================================================================
அலுவலகப் பணியின் காரணமாக, பாரதம் செல்ல நேரிட்டது. 2 நாட்களில் திரும்பிவிட்டேன் என்றாலும், 20 நாள் இருந்தது போன்ற உணர்வு. என் தாய்த்திரு நாடு அல்லவா?
ஆதர்சக் கவிஞன் பாரதிக்கு பிடித்த இடங்களில் ஒன்றான சேர நன்னாட்டில், கொச்சியில், அதன் இளமையை ரசிக்க நேரமில்லாமல் அவரமாகத் திரும்ப வேண்டியதாயிற்று.
சட்டெனப் பெய்யும் மழை. உடன் மலரும் அந்த மண் வாசம், மழையிலும் குடையுடன் எப்போதும் அவசரத்தில் மக்கள் கூட்டம், மக்களைவிட அதிகமான பலதரப்பட்ட வாகனங்கள், பச்சை மரங்கள், அதில் சிறகடித்து விளையாடும் பறவைகள், கோவில்கள், creeks, அதில் ஊர்ந்து செல்லும் launches, வேஷ்டிகள், அவ்வப்போது தென்படும் முண்டுகள், வெளிப்பார்வைக்கு என் பாரதம் மிகவும் அழகுதான், எனக்கு எப்போதும் பொன்குஞ்சுதான்.
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com