நேற்று முன்தினம் தற்செயலாக மெட்டிஒலி மெகாத்தொடரைப் பார்க்க நேரிட்டது. ( நான் வீடு திரும்பும்போது அனேகமாக அண்ணாமலை அல்லது அடுத்த சீரியல்தான் அழுதுகொண்டும் அழவைத்துக்கொண்டும் இருக்கும்)
அதில் அப்பா அடிக்கடி கோபப்படும் தன் மூத்த மகளிடம் " ரௌத்திரம் பழகு" என்பதற்கு அளித்த விளக்கம் வெகு அருமை.
"கோபத்தின் விளைவுகள் பலவீனமாக இருக்குமானால் அங்கே கோபத்தை காட்டாமல் இருக்கப் பழகு. ரௌத்திரம் பழகு"
மூன்று நான்கு நிமிடம் அந்தப் பெரியவர் பேசிய வசனம் சுத்தமாக என்னைக் கட்டிப் போட்டு விட்டது. குப்பையான சிப்பியில் கிடைத்த முத்து அது.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு மேலாக அவற்றை பழக்குவது என்பது எப்படிப்பட்ட கடின செயல். அதற்கு எத்தகைய மன உறுதியும் ஆற்றலும் வேண்டும். உணர்ச்சிகளோடு விளையாடாதே என்கிற மனிதன் உணர்ச்சிகளையே விளையாட்டுப் பொருளாக மாற்ற மனத்திண்மை மட்டும் போதாது. அசுரப் பயிற்சியும் வேண்டும்.
இனிமேல் அடிக்கடி ரௌத்திரம் வரும் போது
""ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?""
என்ற பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பலை நினைவில் கொண்டு,
ஒருமுறையாவது அடக்கப் பழக முயற்சி செய்யப் போகிறேன்,
"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான், அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்" எனச் சொன்ன ஐய்யன் வள்ளுவனே அதற்குத் துணை.
அதில் அப்பா அடிக்கடி கோபப்படும் தன் மூத்த மகளிடம் " ரௌத்திரம் பழகு" என்பதற்கு அளித்த விளக்கம் வெகு அருமை.
"கோபத்தின் விளைவுகள் பலவீனமாக இருக்குமானால் அங்கே கோபத்தை காட்டாமல் இருக்கப் பழகு. ரௌத்திரம் பழகு"
மூன்று நான்கு நிமிடம் அந்தப் பெரியவர் பேசிய வசனம் சுத்தமாக என்னைக் கட்டிப் போட்டு விட்டது. குப்பையான சிப்பியில் கிடைத்த முத்து அது.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு மேலாக அவற்றை பழக்குவது என்பது எப்படிப்பட்ட கடின செயல். அதற்கு எத்தகைய மன உறுதியும் ஆற்றலும் வேண்டும். உணர்ச்சிகளோடு விளையாடாதே என்கிற மனிதன் உணர்ச்சிகளையே விளையாட்டுப் பொருளாக மாற்ற மனத்திண்மை மட்டும் போதாது. அசுரப் பயிற்சியும் வேண்டும்.
இனிமேல் அடிக்கடி ரௌத்திரம் வரும் போது
""ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?""
என்ற பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பலை நினைவில் கொண்டு,
ஒருமுறையாவது அடக்கப் பழக முயற்சி செய்யப் போகிறேன்,
"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான், அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்" எனச் சொன்ன ஐய்யன் வள்ளுவனே அதற்குத் துணை.
Comments:
Post a Comment